கோவில்பட்டியில் சீமான் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முயன்புரம் வீரன் சுந்தரலிங்கம் சிலை அருகில் இன்று பகலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறும பொம்மை எரிப்பு போராட்டத்ததை தமிழ்புலிகள் கட்சியினர் நடத்தினார்கள்.
தமிழ் இனத்தின் பூர்வீக அருந்ததியர் மக்களை வந்தேரிகள் என்று சொல்லி இனவெறியை தூண்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதகாக சீமான் மீது குற்றம் சாட்டி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தாங்கினார். இளம் புலிகள் அணி மாவட்ட செயலாளர் தமிழரசு,, செய்தி தொடர்பாளர் கனியமுதன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், காத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணை செயலாளர் பீமாராவ் உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.