• May 20, 2024

அ.தி.மு.க.வுக்கும் ஓ.பி.எஸ்.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது – முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

 அ.தி.மு.க.வுக்கும் ஓ.பி.எஸ்.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது – முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து கூறியதாவது:- *

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கள்:- சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அதிமுக பீடுநடை போடும் –  

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி:- * எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றிருக்கிறது. *

– முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர். நியாயமான திர்ப்பு வந்துள்ளது

-முன்னாள் அமைச்சர்   டி. ஜெயக்குமார்:- கவுரவர்களின் சூழ்ச்சி எடுபடவில்லை, பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. மகிழ்ச்சியான தீர்ப்பு. அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. அரசியலில் ஓ.பி.எஸ்-ன் எதிர்காலம் ஜீரோதான்; ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை; அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் *

 அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா:- வெற்றி மீது வெற்றி வந்து அண்ணன் எடப்பாடியாரைச் சேரும் – சுப்ரீம் கோர்ட்டின் தெய்வ வாக்கு. அம்மாவை வேண்டி நின்ற எங்களுக்கு இந்த தீர்ப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:-:-. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களும் தீர்ப்பு அளிப்பார்கள், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராகக் கொண்டு வருவோம். எடப்பாடியார் தலைமையில் உழைப்போம், எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்துவோம் –

*

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *