கோவில்பட்டி ராஜீவ் நகரில் சாலையை சீரமைக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூங்கும் போராட்டம்; பா.ஜனதா அறிவிப்பு

கோவில்பட்டி ராஜீவ் நகர் ஆறாவது சாலை முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் மினி பஸ் ஓட வில்லை ஆகையால் சாலையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் வசந்த் ராஜ் நகர தலைவர் சீனிவாசன் ஊடகபுரி மாவட்ட செயலாளர் ராஜகாந்தன் அரசு தொடர்பிரிவு நகரத் தலைவர் வெள்ளைச்சாமி மகளிர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தில்லை ஆகியோர் மனு அளித்தனர்.
சாலை சீரமைக்காத பட்சத்தில் பிப்ரவரி 2ந் தேதி காலை 10 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூங்கும் போராட்டம் கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமையில் நடத்தப்படும் என்று மனுவில் கூறப்பட்டது உள்ளது.

