• June 9, 2025

கோவில்பட்டி புதிய பஸ் நிலையம், 26-ந்தேதி முதல் தினசரி சந்தையாக மாறுகிறது

 கோவில்பட்டி புதிய பஸ் நிலையம், 26-ந்தேதி முதல் தினசரி சந்தையாக மாறுகிறது

கோவில்பட்டி  நகராட்சி ஆணையாளர் ராஜாராம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் உ முத்துராமலிங்க தேர்வர் தினசரி சந்தையில்  கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு ரூ. 6 கோடியே 87 லட்சம் செலவில் புதிதாக கடை கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கி உள்ளது.’

அதன்பேரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் பழைய கடையை இடித்து விட்டு புதிதாக கடை கட்டிடங்கள் கட்டுவதற்கு 2.1.2023 அன்று ஒப்பந்ததாரருக்கு  பணி உத்தரவு வழங்கப்பட்டு பணி மேற்கொள்ள தயார் நிலையில் இருந்து வருகிறது,.

மேற்படி புதிய சந்தையின் கட்டுமான பனி ம்சுடிவடையும் வரையில் தற்காலிக சந்தை கோவில்பட்டி நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் 26-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் செயல்படும் என பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *