• June 15, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டால் நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் பெறுவார் ;டி. ஜெயக்குமார் பேட்டி

 ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டால் நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் பெறுவார் ;டி. ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக,
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்,
திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அதை மக்களுக்கு எடுத்து சொல்லி திமுகவுக்கு எதிராக மிக பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்றார்.

2024 தேர்தலில் திமுக பூஜ்ஜியம் அதேபோல் 2026 தேர்தலிலும் திமுக பூஜ்ஜியம் என மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமையும் என தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் குஜராத் பயணம் குறித்த கேள்விக்கு,
இந்தியா ஒரு சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக கொண்டு சீரும் சிறப்புமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தாம் தான் அதிமுக என ஓபிஎஸ் எவ்வாறு சொல்ல முடியும் அவ்வாறு சொல்வது சட்டரீதியாக தவறு என ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஏ பார்ம் பி பார்மில் கையெழுத்து போடும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் உள்ளது என விளக்கம் அளித்தார்

அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் அதன் மூலம் அதிமுகவுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்கிற வகையில் திமுகவின் பி டீமாக ஒபிஎஸ் செயல்படுவதாக அதிமுக தொண்டர்கள் பார்ப்பதாக குற்றம் சாட்டினார்

ஒபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் அவரை மக்கள் சுயேட்சையாக தான் கருதுவார்கள் இந்த தேர்தலில் நோட்டா வுக்கும் கீழே ஒபிஎஸ் சென்று விடுவார் என விமர்சித்தார்.

மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான பேச்சு வார்த்தை சுமூகமாக உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *