கலிங்கப்பட்டியில் கனிமொழி எம்.பி.

கோவில்பட்டி அருகே கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. தொடக்கி வைத்தார் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவிற்கு தலைமை தாங்கினார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
