கோவில்பட்டியில் நடிகர் பிரபு

கோவில்பட்டிக்கு வருகை தந்த நடிகர் பிரபு தனது தந்தைசிவாஜி கணேசான் 1981ம் ஆண்டு திறந்து வைத்த பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேவர் சிலை பொறுப்பாளர் மற்றும் பராமரிப்பாளர் ச. ஆறுமுகப் பாண்டியன் வரவேற்றார். நடிகர் பிரபுவை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து விட்டனர்.அவர்களை பார்த்து கையசைத்து கும்பிட்டு தனது மகிழ்ச்சியை பிரபு தெரிவித்து கொண்டு புறப்பட்டு சென்றார்.
