மாண்பு,மரபுகளை திமுக எப்போதும் மதிப்பதில்லை;டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :-
கேள்வி : ஒரே நாடு,,ஒரே தேர்தல் என்று வந்தால் அதிமுக ஏற்றுக்கொள்ளுமா
பதில் : கொள்கை முடிவு என்பது வேறு. இது கட்சியின் கொள்கை முடிவு.16 ம் தேதிக்குள் கடிதம் அனுப்பவேண்டும். கடிதத்தில் என்ன உள்ளது என்பது சஸ்பென்ஸ். கட்சியின் கொள்கை முடிவினை இங்கு பொது வெளியில் சொல்ல முடியாது.அதே நேரத்தில் சூசமாக என்ன சொல்ல முடியும் என்றால்.தமிழகர்கள் எல்லோருக்குமே ஒரே நாடு.ஒரே தேர்தல் மகிழ்ச்சி என்றால் ஒரு கட்சிக்கு மட்டும்,திமுகவிற்கு மட்டும் வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயமாகத்தான் இருக்க முடியும்.
கேள்வி : ஆளுநரை மாற்றக்கோரி திமுக மனு அளித்துள்ளதே
பதில் : இவர்களுக்கு உடன்பட்டால் ஆளுநர் தேவை. உடன்படவில்லை என்றால் ஆளுநர் தேவையில்லை.இதுதான் திமுகவின் அடிப்படை கொள்கையாக உள்ள விஷயம். மாண்புகள்,மரபுகளைக் காலம் காலமாக திமுக எப்போதும் மதிப்பதில்லை.
ஆளுநர் உரை என்பது அரைவேர்காடு தனம் அவர் வெத்து வேட்டு. அப்படி கடுமையாக விமர்ச்சனம் செய்தீர்களா இல்லையா.அது தற்போது சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டுள்ளதே அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் அரசு எழுதி கொடுப்பதைத்தான் ஆளுநர் படிக்கிறார் அரசு எழுதிக் கொடுத்தது ஒரு வெத்துவேட்டு.வெற்று அறிக்கை அப்படி படுமோசமாக ஆளுநர் உரையை விமர்ச்சனம் செய்தீர்கள் இல்லையா. அவருக்கு வந்தால் தக்காளி சட்னி. நமக்கு வந்தால் ரத்தம்.ஒரு முரண்பாடு,நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிக்கொள்வது இதுபோல மாற்றிக்கொள்வதில் திமுக கில்லாடி. தமிழக சின்னத்தின் அர்த்தம் என்ன. வாய்மையே வெல்லும். ஆனால் இன்றைக்கு அரசின் சின்னத்தை மாற்றி பொய்மையே வெல்லும் என்ற அளவுக்குத்தான் இந்த அரசின் செயல்பாடு உள்ளது. வாயைத் திறந்தால் பொய். 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டரா.நீட்டுக்கு கையெழுத்துப்போட்டு ரத்து செய்துவிட்டீர்களா. அந்த சூட்சுமத்தைச் சொல்லிவிட்டீர்களா. மாதம் ஆயிரம் தருவோம் என்று சொன்னீர்களே.என்ன ஆனது.
தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக எப்போது தேர்தல் வரும்,இவர்களுக்குத் தகுந்த பதிலடி தரவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் ஆளுநர் பதவி என்பது அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட பதவி.அரசியல் அமைப்பு சட்டத்தை எல்லோரும் மதிக்கவேண்டும் என்பதுதான் கழகத்தின் நிலைப்பாடு. பைபிள்,குரான், மாதிரி நமக்கு அரசியல் அமைப்பு சட்டம். அரசமைப்பு சட்டப்படி நடந்தால் நல்ல விஷயம். கழகத்தைப் பொறுத்தவரையில் அன்னபறவைஅதுபோல எது நல்ல விஷயமே அதனை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். தவறான விஷயத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள முடியாது.
கேள்வி : தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலத்தின் மாண்பும் கெட்டுவிட்டிருக்கும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளாரே.நீங்களும் பேரவைத் தலைவராக இருந்துள்ளீர்கள்.அவர் குறிப்பிட்டது சரிதானா
பதில் : ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருதற்கு உரிய வழிமுறை உள்ளது.அன்று பேரவையில் நிகழ்ச்சி நிரலே இல்லையை. அன்றைக்கு எந்த நிகழ்ச்சியையும் சேர்க்கக்கூடாது.அதற்கு மறுநாள் சேர்க்கலாம். ஆனால் இந்த அடிப்படை விதிகூட தெரியாத சட்டப்பேரவையாக உள்ளது என்பதுதான் தலைவிதி என்று குறிப்பிட்டேன். பேரவைத் தலைவரே அல்லது பேரவைத் தலைவர் இல்லாதபோது துணைத் தலைவரோ,அவர் இல்லாவிட்டால் மாற்றுத் தலைவர்களோ அந்த சீட்டில் அமரும்போதுதான் சிட்டிங் ஆப் அசம்பிளி வரும். ஆளுநர் அன்றைக்கு அரசின் கொள்கையைச் சொல்வதற்காக வந்தார்.
கேள்வி : தமிழகம் சிறந்த முறையில் செயல்பட்டுவருகிறது என்று பேரவையில் ஸ்டாலின் பேசியுள்ளாரே
பதில் : தன் புகழைத் தானே பாடி வருகிறார்.நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மற்றவர்கள் பாராட்ட வேண்டும்.அவரை யார் பாராட்டுவார்கள்.அவர் உடன் ஒத்து ஊதுகின்ற,அவருடன் ஜால்ரா அடிக்கின்ற ஒரு சில கட்சிகள்தான் பாராட்டிக்கொண்டிருக்கும். தமிழக மக்கள் யாரும் பாராட்டவில்லை. உள்ளங்கனி நெல்லிக்கனிபோல இன்றைக்குத் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரிய அளவிற்கு வேதனையில் தத்தளித்துவருகிறது.கொடுமையில் தத்தளித்துவருகிறது.இந்த கொடுமையிலிருந்து,வேதனையிலிருந்து எப்போது விடியல் பிறக்கும் என்று உள்ளார்கள்.அந்த விடியல்தான் அம்மாவின் அரசு.
ஜாதி மதத்தைக் கடந்து கொண்டாடப்படும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை.மாணவர்கள் நலன் கருதி வேறு ஒரு நாளில் தேர்வு வைப்பதுதான் நல்லது.எனவே எஸ்.பி.ஐ வங்கி வேறு நாளில் தேர்வை வைக்கவேண்டும்.
கேள்வி : அதிமுகவுக்கு இந்த ஆண்டு தமிழக பொங்கலா,தமிழ்நாடு பொங்கலா
பதில் : அண்ணா வழி வந்த இயக்கம் இது. சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு என்று அழைக்கின்றோம்.வழக்கத்தில் நாம் தமிழகம் என்று சொல்கின்றோம். எனவே தமிழ்நாடு என்பதை என்றைக்கும் மாற்றக்கூடாது.இது அண்ணாவின் கனவு. எனவே தமிழ்நாடுதான்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
