இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண், வாகனம் மோதி பலி

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தியாகராஜா நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மனைவி சந்தனமாரி (வயது 30), இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை எப்போதும்வென்றான் பாலம் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் சந்தனமாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
