• June 6, 2025

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவாரூர், நாகை ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்து உள்ளனர்.
இவற்றில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுடன் சேர்த்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *