• May 20, 2024

போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது

 போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிவந்தா குளம் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். தூத்துக்குடி அய்யாசாமி காலனி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் மகன் ரத்னஹரிஷ் (21), மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் யோகீஸ்வரன் (21) மற்றும் வண்ணார் தெருவை சேர்ந்த இளங்கோ மகன் கணேஷ் (20) ஆகிய 3 பேரும் அங்கு வந்த போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்றனர்.

உடனே போலீசார் அவர்களை தடுத்து 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரத்னஹரிஷ் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகளும், யோகீஸ்வரன் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *