நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக […]
தற்போது உலகம் ஆன்லைன் உலகமாகி விட்டது. எதை வாங்க வேண்டும் என்றாலும் ஒரு மொபைல் போன் போதும். பெரும்பாலான மக்களும் எந்த பொருள் ஆர்டர் செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நம்பி இருக்கின்றனர். ஆர்டர் செய்து 24 மணிநேரத்துக்குள் வீடு தேடி வரும். இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது மூத்த குடிமக்களும் ஆன்லைன் விற்பனையை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். பண்டிகை காலத்தில், விற்பனையை பட்டையை கிளப்ப, ஆன்லைன் வர்த்தக தளங்கள் உச்சபட்ச தள்ளுபடி, மெகா சலுகைகளுடன் பொருட்கள் விற்பனையை […]
சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இங்கு காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது […]
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரெயில்வே மேம்பாலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரெயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சேலம் மாவட்டத்தை சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு நபர் என மொத்தம் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள். வேலையில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. விரைவு ரெயிலை பொருத்தவரை […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 263 ரன்களை சேர்த்தது. சுப்மன் கில் […]
கோவில்பட்டியில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் வலியுறுத்தல்
கோவில்பட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியில் 10-வது நகர மாநாடு நடந்தது.ராமசுப்பு கட்சிக் கொடியேற்றினார். நகர்மன்ற உறுப்பினர் ஜோதிபாசு அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். அந்தோணிசெல்வம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நூர்முகமுது மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். நகரச் செயலாளர் சீனிவாசன் வேலை அறிக்கை சமர்பித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நிர்வாகிகள் விஜயலட்சுமி, முருகன்,கதிர்வேல்,கண்ணன்,கணேசன்,தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- *கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு […]
இரண்டாம் குத்து படத்தில் விநியோக உரிமைக்கான பாக்கி தொகையை வழங்காததை எதிர்த்து பிளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பணத்தை செலுத்தாமல் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், அந்த படத்தை வெளியிட தயாராக உள்ளதாக கூறி, படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின் படி, வட்டியுடன் சேர்த்து, […]
பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து என்எல்சி நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு […]