கோவில்பட்டியில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க புறவழிச்சாலை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் வலியுறுத்தல்


கோவில்பட்டி நகர மார்க்சிஸ்ட் கட்சியில் 10-வது நகர மாநாடு நடந்தது.ராமசுப்பு கட்சிக் கொடியேற்றினார். நகர்மன்ற உறுப்பினர் ஜோதிபாசு அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். அந்தோணிசெல்வம் வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நூர்முகமுது மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். நகரச் செயலாளர் சீனிவாசன் வேலை அறிக்கை சமர்பித்தார்.
மாவட்ட செயலாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நிர்வாகிகள் விஜயலட்சுமி, முருகன்,கதிர்வேல்,கண்ணன்,கணேசன்,தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
*கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும்.
*கோவில்பட்டியில் போக்குவரத்து நெருக்கடிய தவிர்க்க, சாத்தூரில் இருந்து கோவில்பட்டி ஊருக்குள் வரும் வழியில் தனியார் கல்லூரி அருகே மாநில சாலை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, சிதம்பராபுரம், திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு வழியாக நாலாட்டின்புதூரில் தேசிய நான்குவழிச்சாலையில் இணையும் வகையில் சுமார் 17 கிலோ மீட்டர் நீளத்துக்கு தூரத்துக்கு இந்த புறவழிச் சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும். *புதிய கூடுதல் பேருந்து நிலையத்தை அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் செயல்படுத்த வேண்டும். *இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை பணிகளை தொடங்க வேண்டும்.
*மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
*சொர்ணமலையை பாதுகாக்க வேண்டும்.
*வள்ளுவர் நகர், கடலையூர் சாலை, 10-வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். *விடுபட்ட பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
