ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மெல்போர்னில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதிகபட்சமாக முகமது ரிஷ்வான் 44 ரன்களும் இறுதியில் நசீம் ஷா 40 ரன்களும், பாபர் அசாம் 32 ரன்களிலும் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி […]
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர், உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கிக்கு எதிராக நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “குறிப்பிட்ட தூரத்தில் டெலிவரி செய்ய இலவசம் என்ற மெம்பர்ஷிப்பை ஸ்விக்கியில் நான் வாங்கி உள்ளேன். அப்படியிருக்கையில், நவம்பர் 1-ம் தேதி ஸ்விக்கியில் நான் ஆர்டர் செய்தபோது என் வீட்டிற்கும், உணவகத்திற்கும் இடையே உள்ள தூரத்தை 9.7 கி.மீ என்பதில் இருந்து 14 கி.மீ தூரம் என ஸ்விக்கியின் இணையதளம் […]
வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாரி செய்த தவறுக்கு அரசு மீது பழிபோட கூடாது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும். […]
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கி கொண்டிருக்கும் போது மொபைல் போன் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை என்று அந்நாட்டு அரசு அதிரடியாக சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் மக்கள் பெரும்பாலும் சைக்கிள் போக்குவரத்தை பெரிதும் பயன்படுத்தி வருவதால், சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]
நவம்பர் 5 மற்றும் 23-ம் தேதிகளில் தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக எச்டிஎப்சி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கூறியுள்ளதாவது:- அத்தியாவசிய சிஸ்டம் பராமரிப்பு (Essential System Maintenance) காரணமாக, 2024 நவம்பர் மாதத்தில் 2 நாட்களுக்கு, அதன் யுபிஐ சேவைகள் செயல்படாது. நவம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் செயல்படாது. நவம்பர் 5-ம் தேதி நள்ளிரவு 12 […]
கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் உள்ளதால், அவை வாக்கு சதவிகிதத்தை பாதிக்கலாம் என கருதி தேர்தல் […]
கடந்த அக்டோபர்-27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய் திமுகவையும், திமுக ஆட்சியையும் விமர்சனம் செய்து பேசினார். இதற்கு பதிலடியாக திமுக தரப்பில் எதிர்ப்புகள் வலுத்தது. குறிப்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக ஆலமரம் போன்றது என தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்ட போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் தனது […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சப் ஜூனியர் பெண்கள் சாம்பியன் போட்டி திருநெல்வேலியில் நவம்பர் 9 முதல் 12 ந்தேதி வரை அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது,. இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி கலந்துகொண்டு விளையாட இருப்பதால் மாவட்ட ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை )மாலை 4 மணி […]
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் நியூசிலாந்து பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை கூட விரட்டி பிடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி […]
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. திரையரங்கில் வெளியாகி வரவேற்பினை பெற்ற நிலையில் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஓடிடி தளத்தில் ‘மெய்யழகன்’ படத்தைப் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், படகுழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார். இப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து […]