நாளை 2 மணி நேரம் யுபிஐ சேவை இயங்காது என எச்டிஎப்சி வங்கி அறிவிப்பு

நவம்பர் 5 மற்றும் 23-ம் தேதிகளில் தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக எச்டிஎப்சி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கூறியுள்ளதாவது:-
அத்தியாவசிய சிஸ்டம் பராமரிப்பு (Essential System Maintenance) காரணமாக, 2024 நவம்பர் மாதத்தில் 2 நாட்களுக்கு, அதன் யுபிஐ சேவைகள் செயல்படாது. நவம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் செயல்படாது.
நவம்பர் 5-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை (மொத்தம் 2 மணிநேரங்கள்) யுபிஐ சேவைகள் செயல்படாது. பின்னர் நவம்பர் 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலாக மொத்தம் 3 மணி நேரங்களுக்கு எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் செயல்படாது. என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரமத்தை தவிர்க்க, இவ்விரு தினங்கள் மற்றும் நேரங்களின் போது எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.
இந்த பராமரிப்பு காலத்தில் எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே (RuPay) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் அப் பே, பேடிஎம், மொபிக்விக் (MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik) உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
