கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பனி நடைபெற இருப்பதால் 4 ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அதற்கு பதிலாக பைபாஸ் சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்று நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது. கூடுதல் பேருந்து நிலையத்தில் எந்தவித அடிபப்டை வசதியும் கிடையாது. எனவே அங்கிருந்து பேருந்துகள் கிளம்பினால் சரியாக இருக்காது என்று எதிர்ப்புகள் வந்தன. இதனால் குறிப்பிட்ட நாளில் அண்ணா பேருந்து நிலையத்தில் பணிகள் நடக்கவில்லை […]
கோவில்பட்டி இலுப்பையூரணியில் தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு சென்னை பையனூரில் அமைந்துள்ள விநாயகா மிஷன் சட்ட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தினார்கள். 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டத. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கும் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உறவின்முறைசங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் வழிநடத்துதலின்படி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. உறவின் முறைச் சங்க உப தலைவர் எம்..செல்வராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் டி.ஆர். சுரேஷ் குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் ஏ. செல்வம் ஆலோசனையின்படி பள்ளி பொருளாளர் பி.பாஸ்கரன், குழந்தைகள் தின உரையாற்றினார். பள்ளிக்குழு உறுப்பினர்கள் ஆ.செல்வம், பி.. பொன்ராமலிங்கம், ஐ. ரவி […]
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலரும் பிரபல நடிகையுமான கஸ்தூரி பங்கேற்று பேசினார். அப்போது தெலுங்கு மக்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். கஸ்தூரி மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின் அப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் கஸ்தூரியை தேடும் பணியில் […]
‘உலக நாயகன்’ அடைமொழியை துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்திருந்தார். இதனை பாஜக முக்கிய தலைவர்களுள் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார். ஆளும் திமுகவின் மிரட்டலால் தான் கமல்ஹாசன் தன் பட்டத்தை துறந்துள்ளார்’ என தமிழிசை கூறியிருந்தார். இந்நிலையில், ‘கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.’ என மக்கள் நீதி மய்யம் அறிக்கை […]
தூத்துக்குடியில் ரூ.206.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஒவ்வொரு மாவடத்திலும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். ]அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி வந்தார்.. புதூர் பாண்டியராஜபுரம் சுங்கசாவடி அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் தூத்துக்குடியில் தங்கிய உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழச்சிகளில் […]
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜி புதன்கிழமை அன்று காலை பணியில் இருந்தார். அப்போது பெருங்களத்தூரை , விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவமனைக்கு வந்து டாக்டர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். .’டாக்டர் பாலாஜி, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்ற தவறான புரிதலில் இந்த கத்திக்குத்தில் விக்னேஷ் ஈடுபட்டது விசாரணையில் தெரிய […]
தேவர்கள், வானவர்கள், முனிவர்கள் அனைவரும் சிவபெருமானின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கைலாச மலையில் கூடினர். பெருங்கூட்டம் அங்கு கூடியதால் வடக்கு பகுதி தாழ்ந்து தெற்கு பகுதி உயர்ந்து நின்றது. இதனால் சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி தெற்கு நோக்கி பயணம் செல்லுமாறு கூறினார். அகஸ்திய முனிவரும் தெற்கு நோக்கிப் பயணித்தார். சிவபெருமான் அகஸ்திய முனிவருக்கு தெய்வீக திருமணத்தின் தரிசனத்தை அவர் விரும்பும் போது எல்லாம் பெறலாம் என்று கூறி சில கோவில்களில் தரிசனம் அளித்தார். அந்த கோவில்களில் ரிஷிவந்தியம் […]
தற்போதைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பல்வேறு தரப்பினரையும் தாக்கி வருகிறது. பெரும்பாலான மக்களிடம் இந்த நோய் குறித்த போதுமான விழிப்புணர்வு இருந்தாலும், இந்த நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுவதும் இன்று (நவம்பர் 14-ம் தேதி) நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- நண்பர்களே நான் முக்கியமான ஒன்றை பற்றி பேச விரும்புகிறேன். அவை […]