தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 2015-ம் ஆண்டு, ஜூன் 25-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பலன் பெறுவார்கள். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டுக்கு நடப்பு […]
ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டேல் ஸ்டெயினின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டெயின் விலகியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் மிக சிறந்த வேக பந்துவீச்சாளர்களில் ஒருவர் டேல் ஸ்டெயின். இவர் ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர போவதில்லை என்பதை தனது எக்ஸ் வலைதள பதிவின் மூலம் […]
ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் இந்த பாலத்தில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து நேற்று முன் தினம் தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் […]
நடிகர் போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சார் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி ஆகியோர் அவர்களது பாராட்டை பதிவிட்டனர். இத்திரைப்படம் நாளை […]
மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் பணிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மக்கள் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் […]
கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ […]
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாகக் குறைக்கப்பட்டு உள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக முன்பதிவு காலம் 120 நாட்களாக இருந்த நிலையில் 60 நாட்களாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் முன்பதிவு காலம் என்ற அளவில் மாற்றம் எதுவும் இல்லை எனவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி […]
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று அங்கு கனமழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கி இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அவர்களின் அறிவுரையின்படியும், தூத்துக்குடி மாவட்டத்தில், 1.1.2025-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025 […]