நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 46 ரன்களில் சுருண்டது இந்தியா

 நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:  46 ரன்களில் சுருண்டது இந்தியா

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று அங்கு கனமழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கி இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த சர்பராஸ் கானும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் சற்று நிலைத்து ஆடினர்,ஆனாலும் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த கே எல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மேத் ஹென்றி 5 விக்கெட்டுகள், வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *