தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறிவைத்து கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று இரவு மீன் பிடித் துறைமுகத்திற்கு கள்ள சந்தையில் பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து […]
விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் பலர் இந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். அந்த வகையில் மதுரையில் இருந்து சிலர் வந்து இருந்தனர். நேற்று காலையில் 5 பேர் கடலில் குளிக்க ஆசைப்பட்டனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர்.. அப்போது அவர்கள் ராட்சத அலையில் சிக்கிகொண்டனர். இதில் மதுரை ஜி.ஆர்.நகரைச்சேர்ந்த செல்வகுமார் என்பவரது மனைவி கன்னியம்மாள் (வயது 54).முருகேசன் என்பரவது மகள் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று தொடங்கியது.இதையொட்டி காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற்றது, விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலையில் கோவில் நடை திறந்ததும் அம்மன்-சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அலங்காரம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடைபெற்றுது. கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபப்ட்டு கொடியேற்றம் நடைபெற்றது., தொடர்ந்து 29.10.2024 வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் […]
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று டெல்லியில் 5 நாட்கள் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான டிராப் பிரிவில் இந்திய வீரரான ராஜஸ்தானை சேர்ந்த விவான் கபூர் 44 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி சென்றார். சீனாவின் யிங் குய் 47 புள்ளியுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில் இத்தாலியின் தம்மரோ கசாண்ட்ரோ (57 புள்ளி), கேப்ரியல் ரோசெட்டி (56 புள்ளி) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினர். […]
புதுச்சேரியின் அண்டை மாநிலமான தமிழகத்தில் சாராய விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால் புதுச்சேரியில் சாராய விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் 85 சாராய கடைகளும், காரைக்காலில் 25 சாராய கடைகளும் உள்ளன. இந்த சாராயக் கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பாக்கெட் சாராய விற்பனைக்கு கலால்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக புதுவை அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், புதுச்சேரியில் […]
பீகார் மாநிலம், சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து பெங்களூர் பன்னர் கட்டா பூங்காவிற்கு புலிகள், 8 முதலைகள் மற்றும் பிற அரிய வகை உயிரினங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த 8 முதலைகளில் 2 முதலைகள் லாரியில் […]
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவருக்கு வயது 58. இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் […]
இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மழை இருக்குமா என்ற கேள்வி, மக்கள் மத்தியிலும், தீபாவளி பண்டிகை வியாபாரத்தை நம்பி இருக்கும் வியாபாரிகளுக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்றும்,அதற்கு முந்தைய நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனென்றால் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக்டோபர் 21-ந்தேதி உருவாகும், காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக 23-ந்தேதி […]