விளாத்திகுளம் அருகே கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி

விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் பலர் இந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். அந்த வகையில் மதுரையில் இருந்து சிலர் வந்து இருந்தனர். நேற்று காலையில் 5 பேர் கடலில் குளிக்க ஆசைப்பட்டனர்.
இதை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர்.. அப்போது அவர்கள் ராட்சத அலையில் சிக்கிகொண்டனர். இதில் மதுரை ஜி.ஆர்.நகரைச்சேர்ந்த செல்வகுமார் என்பவரது மனைவி கன்னியம்மாள் (வயது 54).முருகேசன் என்பரவது மகள் இலக்கியா (21) தண்ணீரில் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்துபோனார்கள்.
அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு போராடிய 3 பேரை மீட்டனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர்,. கடலில் மூழ்கி இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்த கன்னியம்மாள்,இலக்கியா குடும்பத்தினரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி/வி./.மார்கண்டேயன் நேரில் சந்தித்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அவருடன் ஒன்றிய திமுக செயலாளர்கள் ராமசுப்பு , சின்னமாரிமுத்து ,அன்புராஜன், பேரூர் கழகச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
