கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று தொடங்கியது.இதையொட்டி காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற்றது,
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலையில் கோவில் நடை திறந்ததும் அம்மன்-சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அலங்காரம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடைபெற்றுது. கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபப்ட்டு கொடியேற்றம் நடைபெற்றது.,
தொடர்ந்து 29.10.2024 வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்: ம.அன்புமணி, ): உதவி ஆணையர் (கூ.பொ) ஜி.செல்வி, செயல் அலுவலர்: கி.வெள்ளைச்சாமி., அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு:மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்,
விழாவின் முதல்நாள் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா. நடைபெற்றது. வழி நெடுக பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
2-வது நாள் (இன்று ) சனிக்கிழமை: காலை 8 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா..இரவு 7.30 மணி காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது,.
இது போல் ஒவ்வொரு நாளும் திருவீதி உலா நடக்கிறது, 12-வது திருநாள் (29.10.2024) செவ்வாய்கிழமை: திருக்கல்யாணம். நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கும். இரவு 7.மணிக்கு மேல் 8 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
பின்னர் சுவாமி யானை வாகனத்தில் அம்மன் பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடைபெறும்., திருக்கல்யாணம் முடிந்தவுடன் செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்டபததில் அன்னதானம் நடைபெறும்.
