கள்ளசந்தையில் பயோடீசல் விற்க முயன்ற 2 பேர், லாரியுடன் சிக்கினர்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறிவைத்து கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
இதைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று இரவு மீன் பிடித் துறைமுகத்திற்கு கள்ள சந்தையில் பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சோதனையிட்டபோது அதில், ரூ.8 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் இருந்தது. இதைடுத்து பயோ டீசல் பேரல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர்[புரம் கந்தன் மற்றும் கே.வி.கே நகர் மணிகண்டன் ஆகிய 2 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல, லாரியுடன் கைது செய்யப்பட்ட 2 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
__
