• June 8, 2025

Month: October 2024

சினிமா

ராஜமவுலி படத்துக்காக தோற்றத்தை மாற்றிய மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ‘எஸ்எஸ்எம்பி29’ படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். […]

செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.247 கோடி வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு, கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரித்து நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]

செய்திகள்

த.வெ.க. கொடி விவகாரம்: விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் நோட்டீஸ்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக […]

செய்திகள்

உடை விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், சேலையூரைச் சேர்ந்த வக்கீல் சத்தியகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அப்போது தி.மு.க., தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த அறிஞர் அண்ணா, […]

செய்திகள்

கோவில்பட்டியில் போலீசார் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி

கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் [போலீசாருக்கு  பணியின் போது ஏற்படும்  மன அழுத்தத்தை போக்கி மன உறுதி அளித்திடவும்தற்கொலைகளை தடுக்கவும், பணியினால்  காவலர்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்குமான யோகா பயிற்சி டி.எஸ்.பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள  மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது முதுகு வலியை போக்குவதற்காக தனு சிரசாசனம்,மனதை ஒரு நிலை படுத்த யோக முத்ரா,,  சீரான சத்தியை அதிகரிக்க பச்சிமோத்தாசனம், சூரிய நமஸ்காரம் லாபிங் தெரபி,  […]

செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இவ்வாண்டு தீபாவளியை (31.10.2024) அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு (01.11.2024) அன்று ஒரு நாள் மட்டும்., […]

சினிமா

விஜய்யின் ‘தி கோட்’ படத்தை பாராட்டிய ரஜினி: வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த்,பிரபு தேவா,அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை குவித்தது. கடந்த 3-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் […]

செய்திகள்

வயநாடு தொகுதி இடைத்தேர்தல்: வருகிற 23-ந் தேதி பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான […]

செய்திகள்

தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின்

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் ஆகிய மாநில காவல்துறை இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். போதைப்பொருட்கள், […]