தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இவ்வாண்டு தீபாவளியை (31.10.2024) அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு (01.11.2024) அன்று ஒரு நாள் மட்டும்., தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (09.11.2024) அன்று பணி நாள் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
