• June 8, 2025

கோவில்பட்டியில் போலீசார் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி

 கோவில்பட்டியில் போலீசார் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி

கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் [போலீசாருக்கு  பணியின் போது ஏற்படும்  மன அழுத்தத்தை போக்கி மன உறுதி அளித்திடவும்தற்கொலைகளை தடுக்கவும், பணியினால்  காவலர்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்குமான யோகா பயிற்சி டி.எஸ்.பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள  மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது

முதுகு வலியை போக்குவதற்காக தனு சிரசாசனம்,மனதை ஒரு நிலை படுத்த யோக முத்ரா,,  சீரான சத்தியை அதிகரிக்க பச்சிமோத்தாசனம், சூரிய நமஸ்காரம் லாபிங் தெரபி,  தியான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்கள் பற்றி பயிற்சி அளிக்கபட்டது கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ்,விளாத்திகுளம் டி.எஸ்.பி அசோகன் மற்றும் கோவில்பட்டி , விளாத்திகுளம் உட்கோட்டங்களில் பணிபுரியும் 100 மேற்பட்ட போலீசார்  பங்கேற்றனர்.  யோகா  பயிற்சியை குணா தொகுத்து வழங்கினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *