• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழ கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளி கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் மாணர்கள், பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர். பண்டிகை காலங்களில் ஆண்டு தோறும் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளியில் வருமானவரி பிடித்தம் பணம் மோசடி;தலைமை ஆசிரியர் மீது 6 பிரிவுகளில்

கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் வருமானவரி பிடித்தம் செய்யப்பட்ட பணம் வங்கியில் செலுத்தப்படாமல் போலி வங்கி செல்லான் மற்றும் போலி ரசீது கொடுத்து ஏமாற்றப்பட்டது கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி   கண்டுபிடிக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக இது போல் பணம் வசூலிக்கப்பட்டு வங்கியில்  செலுத்தப்படாமல் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்  தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், எனது வருமானவரி பிடித்தம் பணமும் […]

செய்திகள்

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்: மிதாலி ராஜின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

9-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 […]

ஆன்மிகம்

வேண்டியது நிறைவேற வணங்க வேண்டிய கடவுள்கள்  

எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக தான். நாம் செய்யும் செயல் வெற்றி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம். இடையூறுகள் நீங்க – விநாயகர் செல்வம் சேர – மகாலட்சுமி, நாராயணர் நோய் தீர –  தன்வந்தரி, தட்சிணா […]

ஆன்மிகம்

சிவனுக்கு படைக்கக்கூடாத பொருட்கள்

தாழம்பூ ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது, சிவன் ஜோதிலிங்கமாய் தோன்றி, தன்னுடைய முதலான தலையை அல்லது முடிவான காலை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொல்கிறார். அதன்படி விஷ்ணு காலை நோக்கியும், பிரம்மா தலையையும் நோக்கி தேடிச் செல்லும்போது, இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் ஆதியை தேடி மேலே சென்று கொண்டிருந்த பிரம்ம தேவன் தன்னுடன் சேர்ந்து கொண்டு பொய் சொல்லுமாறு தாழம்பூவை கேட்டுக் கொண்டார். இருவரும் திரும்பியவுடன், விஷ்ணு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி  விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்  

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 265 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தினமும் காலை 5 மணிக்கு கடலுக்கு செல்லும் இந்த மீனவர்கள் இரவு 9 மணிக்கு கரை திரும்பி விடுவர். இந்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து […]

பொது தகவல்கள்

தன்னம்பிக்கை எப்போது ஆணவமாக மாறும் ?

புதிய முயற்சியிலே, அவர் வெற்றி அடைவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? ‘நாம் வெற்றியே அடைவோம்’ என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வலுவாக இருக்க வேண்டும். இருந்தால் அவர் முழு வெற்றியை அடைவார், உறுதி. நாம் வெற்றி அடைவோமோ, மாட்டோமோ என்ற அரைகுறையான நம்பிக்கையாக அது இருந்தால் அடையக்கூடிய வெற்றியும் அரைகுறையான வெற்றியாகத்தான் இருக்கும். முயற்சியில் குதித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதே, தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது? தோல்வி அடைந்துவிட்டால் நிலைமை இப்போது இருப்பதைக் […]

செய்திகள்

கார் – மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் வினோதினி பிரியா (34).   இவர் கோவையில் வசிக்கும் தனது குடும்பத்தினரை பார்த்து விட்டு காரில் ராமநாதபுரம் திரும்பினார். ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் சென்றனர். வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிகொண்டன. இந்த விபத்தில்  இருசக்கர வாகனத்தில் வந்த பரமக்குடி சந்தை கடைத்தெருவைச் சேர்ந்த நாகராஜன்  மகன் லோகநாதன் (25) , சிவகங்கை […]

செய்திகள்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்கிவிடுவேன்; சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திராவிடம் என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொதிக்கின்றனர். ஆனால், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஒருவருக்கும் கோபம் வரவில்லை. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள் இந்த திராவிடர்கள். வரலாற்றில் ஆரியம் கண்டாய்.. தமிழன் கண்டாய்.. என்று உள்ளது. திராவிடத்தை வேண்டுமென நுழைத்து விட்டு மூன்று சதவீதம் […]