• June 8, 2025

கார் – மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

 கார் – மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் வினோதினி பிரியா (34).   இவர் கோவையில் வசிக்கும் தனது குடும்பத்தினரை பார்த்து விட்டு காரில் ராமநாதபுரம் திரும்பினார்.

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் சென்றனர். வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிகொண்டன. இந்த விபத்தில்  இருசக்கர வாகனத்தில் வந்த பரமக்குடி சந்தை கடைத்தெருவைச் சேர்ந்த நாகராஜன்  மகன் லோகநாதன் (25) , சிவகங்கை மாவட்டம் குமாரகுறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (24) ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.

தகவலறிந்து, பரமக்குடி தாலுகா போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். பலியான இருவரது உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *