• June 7, 2025

Month: September 2024

செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் உற்பத்தியை தொடங்குவது பற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு 1999ம் ஆண்டு தனது முதல் ஆலையை இந்தியாவில் நிறுவியது. குஜராத் மற்றும் சென்னை என இந்தியாவில் இரண்டு இடங்களில் ஆலைகளை நிறுவியது. 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் கொடிகட்டி பறந்து வந்த விற்பனை, கொரோனா பெருந்தோற்றிற்கு பிறகு சரிய ஆரம்பித்தது. அதன்படி, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் சனாட் பகுதியில் செயல்பட்டு வந்த ஆலையை அந்நிறுவனம் மூடியது. அப்பொழுது கடைசி காராக ஃபோர்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் மனைவி, மகனை அரிவாளால் வெட்டியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தலக்கட்டை பகுதியை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் (57), இவரது மனைவி முத்துமாரி(58), இவர்களது மகன்  ராமச்சந்திரன்(38). வேலாயுத பெருமாள் பெயரில் உள்ள 16 சென்ட் நிலததை  தனது பெயருக்கு எழுதி தரும்படி மகன் ராமச்சந்திரன் வற்புறுத்தி வந்தார், ஆனால் எழுதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் வேலாயுத பெருமாள், அவரது நண்பர் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த அந்தோணி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர், அப்போது  வேலாயுத […]

தூத்துக்குடி

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் காரில் குண்டு வெடிக்கும் என மிரட்டிய நபருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று  இன்று பிற்பகல் தொடர்பு கொண்ட மர்ம நபர், “தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியுள்ள வாகனத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்,உடனடியாக உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு தகவல் சொன்னார். இதை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர், நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர், துப்பறியும் மோப்ப நாய்கள் .கொண்டு செல்லப்பட்டு […]

தூத்துக்குடி

படிப்பை  பாதியில் விட்ட மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-2024-ம் கல்வி ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்று பள்ளி இறுதி தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேராதவர்கள் மற்றும் 8 முதல் 12-ஆம் வகுப்பில் பயிலும் போது இடைநின்ற மாணவர்களுக்கான “உயர்வுக்குப்படி” வழிகாட்டல் நிகழ்ச்சியானது 11.9.2024 (இன்று)அன்று தூத்துக்குடி வ.உ.சி […]

செய்திகள்

‘கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால்,ஆண் குழந்தை பிறக்கும்’- அமைச்சர் காந்தியின் பேச்சு

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், ‘மாணவ – மாணவிகள் அரசுக் கொடுக்கிற மகத்தான திட்டங்களைப் பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. அரசு மூலமாக நிறைய உதவிகள் கிடைக்கிறது. ஒண்ணே ஒண்ணுதான். பெற்றோர்களை மட்டும் மறக்காதீங்க. அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களைப் படிக்க வைக்கிறாங்க தெரியுமா? அதுமட்டுமல்ல. நான், அடிக்கடி இன்னொன்னையும் சொல்லுவேன். போன ஜென்மத்தில் `பாவம்’ […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில்  ரூ.77.80 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தமிழ்நாடு […]

செய்திகள்

‘எனது ஒலிம்பிக் பின்னடைவை விமர்சித்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும்’

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதே […]

தூத்துக்குடி

இலங்ககை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாக கூறி கைது செய்தனர். பின்னர்  22 மீனவர்களும் கல்பிட்டி மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 22 மீனவர்களும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்ந்து அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு கடந்த 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. […]