கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் மனைவி, மகனை அரிவாளால் வெட்டியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தலக்கட்டை பகுதியை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் (57), இவரது மனைவி முத்துமாரி(58), இவர்களது மகன் ராமச்சந்திரன்(38).
வேலாயுத பெருமாள் பெயரில் உள்ள 16 சென்ட் நிலததை தனது பெயருக்கு எழுதி தரும்படி மகன் ராமச்சந்திரன் வற்புறுத்தி வந்தார், ஆனால் எழுதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் வேலாயுத பெருமாள், அவரது நண்பர் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த அந்தோணி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்,
அப்போது வேலாயுத பெருமாள் மனைவி முத்துமாரி , மகன் ராமச்சந்திரன் இருவரும் அங்கு வந்து 16 சென்ட் இடத்தை எழுதி தரும்படி கேட்டு தகராறு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதபெருமாள், தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து மகன் ராமசந்திரனை வெட்டினார்.
.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துமாரி, அந்தோணி ஆகியோர் தடுத்தாக தெரிகிறது. அப்போது முத்துமாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனைப்பார்த்த சிலர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தாய்-மகன் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுத பெருமாள், அந்தோணி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
