தூத்துக்குடி.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி (5.10.24) சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தனியார்துறை வேலை இணையத்தில். (www. tnprivatejobs.tn.gov.in) கண்டிப்பாக பதிவு செய்தல் வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு […]
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,கூறி இருப்பதாவது:-“இந்திய நாட்டின் மாநில அரசியல் களங்களில் இன்றுவரை தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் நம் யுகத்திற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்த அரசியல் பேராசான் அண்ணாதான் என்றால் மிகையாகாது.“தமிழ்நாடு” என்று பெருமிதத்தோடு சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் […]
மது ஆலை உரிமையாளர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்தது என்?திருமாவளவனுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “திருமாவளவன், பா.ம.க-வை சாதி கட்சி என்கிறாரே..?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்..?. பா.ம.க. சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. பா.ம.க. சுற்றுச்சூழல், நீர் நிலைகள், கல்வி, மருத்துவம், மது ஒழிப்பு, நேர்மையான ஆட்சிக்காக போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க. இப்படி எல்லாம் எத்தனையோ பல சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. தேர்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசப்படுகிறது. 100 சதவீத தூய மனதோடுதான் மாநாட்டை ஏற்பாடு செய்கிறோம். மது ஒழிப்பு மாநாட்டில் வேறு எந்த அரசியல் கலப்பும் இல்லை. மாநாட்டை திசை திருப்பும் முயற்சிகள் வேண்டாம். மது ஒழிப்பு மாநாட்டில் திமுக மற்றும் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் விஷால் திருச்சி ஆதீனத்துடன் நேற்று வந்தார். அவர் கோவில் மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சுவாமி சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார். வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி […]
அமெரிக்காவில் 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ நகரில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:-முதலீட்டு ஒபந்தங்கள் தொடர்பாகவும், வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும், வெள்ளை அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்களே? பதில்:-அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே உங்களை சந்தித்து தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டு […]
அமெரிக்காவில் 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ நகரில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக இன்று காலை சென்னை திரும்பினார். அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி […]
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) நேற்று காலை 11 மணியளவில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். \பின்னர் கேப்டன் ஆலயம் பெயர் பலகை திறப்பு விழா, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர் ப. பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர்கள், […]