• June 8, 2025

தூத்துக்குடியில் அக்டோபர் 5-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

 தூத்துக்குடியில் அக்டோபர் 5-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி   வ.உ.சி. கலைக் கல்லூரியில்  வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி (5.10.24) சனிக்கிழமை   காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள்  தனியார்துறை வேலை இணையத்தில்.  (www. tnprivatejobs.tn.gov.in)  கண்டிப்பாக பதிவு செய்தல் வேண்டும்.

இந்த  வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ITI, Diploma, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர் அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்வர் .

இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன பிரதிநிதிகள்  சனிக்கிழமை காலை 9 மணிக்கு தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உசிதம்பரனார் கல்லூரிக்கு வருகைபுரிந்து  இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form- இல்  உங்கள் நிறுவனம் தொடர்பான விவரங்களை தொலைபேசி எண்ணுடன்  பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Google Forms பதிவு மூப்பு அடிப்படையில் நிறுவனங்களுக்கான அறை ஒதுக்கீடு செய்யப்படும். (Private Job Portal Registration கட்டாயம்)

Google Form:

\https://forms.gle/EVBDfUpytxF8swtWA

மேற்கண்டவாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *