பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கினால் […]
தூத்துக்குடி துறைமுக விருந்தினா் மாளிகையில் துறைமுக தொழிலாளா் கூட்டமைப்பு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. தேசிய துறைமுக தொழிலாளா்களின் கூட்டமைப்பு தலைவா் முகமது ஹனீப் தலைமை வகித்தாா். இக்கூட்டத்திற்குப் பின்னா் முகமது ஹனீப், ஹெச்எம்எஸ் தொழிற்சங்க பொதுச்செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி, சென்னை, மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி என நாட்டின் 11 பெரிய துறைமுகங்களில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். சுமாா் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓய்வூதியதாரா்கள் […]
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளதுஇந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர், அவர்கள் புத்தாளம் அருகே நேற்று மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர். மேலும் 4 […]
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி வரும் 14-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சில கூடுதல் வேலையின் காரணமாக பராமரிப்பு பணிகளை வரும் 18-ம் தேதி வரையில் நீடிக்க சென்னை கோட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்பட உள்ளது.* நெல்லையிலிருந்து வரும் 16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வந்தே […]
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 10ம் தேதி சிறப்பு முகாம்; வட்டாட்சியர் அலுவலகங்களில்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- “பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு முகாம் 10.8.2024 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் […]
கடந்த 2022 பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் 2022 பிப்ரவரி 20ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், திருச்சியில் தங்கி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் காலை 10.30 மணிக்கு […]
தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பதவிகளில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் பாலாஜி சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளார். […]
மருத்துவப்படி ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க கிளை தலைவர் ஏ.அருமைராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் எஸ்.தங்கவேலு பேசினார். பொருளாளர் முருகையா நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- * 8-வது ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும். *1.1.2020 முதல் 30.6.2021 வரை கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலை நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். *மத்திய அரசின் மருத்துவமனை வசதிகள் அனைத்து நகரங்களிலும் […]
1942-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி நடந்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நினைவு கூரும் வகையில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் சிறப்பு கண்காட்சி நடந்தது. அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ராணுவ அஞ்சல் சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினட் கர்னல் சுந்தரம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்டம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை அஞ்சல் தலைகளோடு இணைத்து எடுத்துரைத்தார். கண்காட்சியில், சுதந்திர போராட்ட வரலாறு, மகாத்மா காந்தி குறித்து வாழ்க்கை […]