• May 9, 2024

Month: January 2024

செய்திகள்

தேமுதிக தொண்டர்களுடன் பிரேமலதா சந்திப்பு

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, கணவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகம் வந்தார்.  அவரது வருகையை ஒட்டி கட்சி தொண்டர்கள் அதிகமானவர்கள் திரண்டு இருந்தனர். கட்சி அலுவலகத்தில் தேமுதிக கொடியேற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.  பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசினார். விஜயகாந்த் விருப்பப்படி கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். நடைபெற இருக்கும் தேர்தலில் தீவிர கட்சி பணியாற்ற வேண்டும் என்று பிரேமலதா கேட்டுக்கொண்டார்

கோவில்பட்டி

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது பற்றி

கோவில்பட்டி கிழக்கு  ஒன்றிய பா. ஜனதா செயற்குழு கூட்டம் ராஜீவ் நகர் இ.பி.காலனி பகுதியில் நடைபெற்றது ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர்கள் வசந்த்,சந்தானம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்  சிறப்பு விருந்தினராக பார்லிமென்ட் பொறுப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் சக்தி கேந்திர பணிகள் பற்றியும் விரிவாக கிளைத் தலைவர்களுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளருக்கும் எடுத்துரைத்தார். கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் மோகன், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி,ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் […]

கோவில்பட்டி

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் கோவில்பட்டி  வீராங்கனைக்கு கீதாஜீவன் வாழ்த்து 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் வர்ஷினி.  இவர் 15 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அரியானா சென்று விளையாடி வந்திருக்கிறார். இதனையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – கீதாஜீவனை, தூத்துக்குடி போல்பேட்டை இல்லத்தில் நேற்று (27.1.2024) சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அமைச்சர் கீதாஜீவன்,விளையாட்டு வீராங்கனை வர்ஷினியை வாழ்த்தியதுடன், மென்மேலும் பல வெற்றிகளைப் பெற […]

கோவில்பட்டி

டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்த்து வியந்த மாணவர்கள்

தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை   பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள டியூசன் செண்டரில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அஸ்ட்ரோகிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க […]

கோவில்பட்டி

இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி   1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக   கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து   மாதம்தோறும   கடைசி ஞாயிறு அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஞாயிற்றுக்கிழமை   28.1.2024    அன்று கோவில் பட்டி   செயின்ட் பால்ஸ் பள்ளியில் வைத்து காலை   10 மணி முதல்   மதியம்   2 மணிவரை   […]

கோவில்பட்டி

கந்து வட்டி கொடுமை: தற்கொலை செய்தவரின் மனைவி, அமைச்சர் காலில் விழுந்து கதறல்;

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் , கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கேட்டு கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டு பத்திரம், நகைகள், செக் ஆகியவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது.  கந்து வட்டி கொடுமையில் சிக்கிய ஆறுமுக பாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆறுமுக பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் நேற்று […]

கோவில்பட்டி

மகிழ்வோர் மன்ற கூட்டம் : 1330 திருக்குறள்கள் ஒப்புவித்த மாணவர்களுக்கு விருது

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 75வது மாதாந்திர கூட்டம் என் கே மஹாலில் நடந்தது.  கூட்டத்தின் போது 1330 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. 1330 குறள்களை ஒப்புவித்த சிப்பிபாறை அரசு பள்ளி மாணவர் அன்புராஜ், கொப்பம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அஸ்விதா ஆகியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர்  கவிஞர் சிவானந்தம் எழுதிய முண்டாசு கவிஞர் பாரதி எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்சுவை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மீண்டும் கால்நடை சந்தை அமைக்க வலுக்கும் கோரிக்கை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்து நிறுத்தப்பட்ட கால்நடைச் சந்தையை மீண்டும் செயல்படுத்திட நகர்மன்றத் துணை தலைவர் ரமேஷ் இடம் மனு வழங்கப்பட்டது. ராஜா தலைமையில் கணேசமூர்த்தி ரத்தினவேல் அயன் சேகர் ஆகியோர் முன்னிலையில் நேதாஜி பாலமுருகன் மனு வழங்கினார் இதில் பரமசிவ பாண்டியன் கிருஷ்ணசாமி உட்பட பல கலந்து கொண்டனர் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-  கோவில்பட்டியில் சுற்று வட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு அதிகமாக […]

செய்திகள்

லாரி மீது கார் மோதி 6 பேர் பலி ; குற்றாலம் அருவியில்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ்,எ உள்பட 6 பேர் நேற்று இரவு காரில் குற்றாலம் சென்றனர். அங்கு ஓட்டலில்  சாப்பிட்டு விட்டு அருவியில் குளித்தனர். நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த அவர்கள் அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டனர். புளியங்குடி அருகில்  சிங்கிலிப்பட்டி- புன்னையாபுரம் இடையே எதிர்பாராத விதமாக கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஞாயிறு நிகழ்ச்சிகள்

*    28.1.2024 ஞாயிற்றுக்கிழமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் வழங்கவுள்ளார் . நேரம்: காலை 10.45 மணி. இடம்: சத்யபாமா திருமண மண்டபம், கோவில்பட்டி. *    ****** *  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி […]