• May 20, 2024

இலவச கண் சிகிச்சை முகாம்

 இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி   1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக   கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து   மாதம்தோறும   கடைசி ஞாயிறு அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள்.

அதன்படி இந்த ஞாயிற்றுக்கிழமை   28.1.2024    அன்று கோவில் பட்டி   செயின்ட் பால்ஸ் பள்ளியில் வைத்து காலை   10 மணி முதல்   மதியம்   2 மணிவரை   கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஏராளமானவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பழைய மாணவர் சங்க தலைவர்    ஜெயராஜ்  தலைமையிலும்   செயலாளர்         என்.ராஜவேல் முன்னிலையிலும் நடந்த முகாமில்    145  பயனாளிகள்   சிகிச்சை பெற்று  பயனடைந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *