இலவச கண் சிகிச்சை முகாம்
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாதம்தோறும கடைசி ஞாயிறு அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள்.
அதன்படி இந்த ஞாயிற்றுக்கிழமை 28.1.2024 அன்று கோவில் பட்டி செயின்ட் பால்ஸ் பள்ளியில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஏராளமானவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பழைய மாணவர் சங்க தலைவர் ஜெயராஜ் தலைமையிலும் செயலாளர் என்.ராஜவேல் முன்னிலையிலும் நடந்த முகாமில் 145 பயனாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்