டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்த்து வியந்த மாணவர்கள்
தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை
பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள டியூசன் செண்டரில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு
அஸ்ட்ரோகிளப் ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு வானியல் குறித்தும் நிலாவை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் ஆசிரியர் கீதா சக்திவேல் உள்பட மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.