எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு […]
தெற்கு இலுப்பையூரணிக்கு சீவலப்பேரி குடிநீர்: பறையர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை
கோவில்பட்டி தெற்கு இலுப்பையூரணி தாமஸ்நகர் பகுதிக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பறையர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பொது செயலாளர் தாவீது ராஜா தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் சுடலைமுத்து பாண்டியன் முன்னிலை வகித்தார். 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் தெற்கு இலுப்பை யூரணி, தாமஸ் நகரில் பறையர் சமுதாய மக்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் […]
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில், தற்போது ஆழமான பகுதிகளில் மட்டும் தண்ணீர் காணப்படுகிறது. அந்தப் பகுதிகளில், சிலர் வலையை விரித்து மீன் பிடிப்பது வழக்கம். தூத்துக்குடி முத்தையாபுரம், குமாரசாமிநகர் 3-வது தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மீன்பிடிப்பதற்காக கோரம்பள்ளம் குளத்தில் வலையை விரித்து வைத்திருந்தார். நேற்று காலையில் சென்று அவர் மீன்களுக்காக வலையை வெளியே இழுக்க முயன்றார். ஆனால் அவரால் வலையை இழுக்க முடியவில்லை. இதனால் அதிக அளவில் மீன்கள் வலையில் […]
கோவில்பட்டி அருகே குலேசகரபுரம் கிராமத்தில் பார்வையற்றோர் சங்க உறுப்பினர்களுக்கு தொழிற்கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். பார்வையற்றோர் தொழிற்கூடம் கோவில்பட்டி தாலுகா லிங்கம்பட்டி பஞ்சாயத்து குலசேகரபுரம் கிராமத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் கோவில்பட்டி பார்வையற்றோர் சிறு தொழில் கூட்டமைப்பு சங்க உறுப்பினர்களுக்கு தொழிற்கூடம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ண […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை பிரதோஷம் சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி.யின் போது கூறியதாவது:- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக தமிழக அரசின் விரக்தியின் வெளிப்பாடாக வரத்து பேட்டியை காண முடிகிறது. அம்மாவின் அரசு மீது புழுதுவாரி தூற்றியதோடு அல்லாமல் பல்வேறு வகைகளில் பல குற்றச்சாட்டுகளை எடுத்துவைத்த காரணத்தினால் எங்களுடைய மேலான பதிலை எடுத்துசொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவர் பேட்டியில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது.இருண்டவன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேய் என்ற அடிப்படையிலும் […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கோவில்பட்டி செயற்பொறியாளர் கே.தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் 17ந் தேதி (சனிக்கிழமை ) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையமும், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் […]
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று (15-ந் தேதி) பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று […]
கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு நாலாட்டின்புத்தூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ,கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணாமாக பல்வேறு பகுதி மக்கள் குடிநீருக்கு அலைமோதுகிறார்கள். இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நாலாட்டின்புத்தூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையத்தை இன்று பார்வையிட்டார். குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் .ராமசாமி ,கோவில்பட்டி […]
காவிரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ. எஸ்.ஐ மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து குரல் எழுப்பினார்கள். விவசாய சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் இரா.உத்தண்டுராவ் சிறப்புரை ஆற்றினார்.ஒன்றிய பொறுப்பாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் கொம்பையா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விஜயாபுரி ஊராட்சி துணை […]