கழுகுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகத்துக்கு ஆட்சியர் ஏற்பாடு

கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு நாலாட்டின்புத்தூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
,கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணாமாக பல்வேறு பகுதி மக்கள் குடிநீருக்கு அலைமோதுகிறார்கள்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நாலாட்டின்புத்தூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையத்தை இன்று பார்வையிட்டார்.

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் .ராமசாமி ,கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர்(பொ) ஜெயா,கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் .கணேசன்,கோவில்பட்டி வட்டாட்சியர்(மு.கூ.பொ) .ராஜ்குமார் ,கழுகுமலை பேரூராட்சி தலைவர் அருணா , துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் சென்றனர்.
சீரான குடிநீர் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் .கி.செந்தில்ராஜ் திடீர் ஆய்வு கொண்டார். கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கே.வெங்கடேஷ் ,காவல் ஆய்வாளர்.சுகாதேவி ஆகியோர் இருந்தனர்.
