கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இ. எஸ்.ஐ மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து குரல் எழுப்பினார்கள்.

விவசாய சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் இரா.உத்தண்டுராவ் சிறப்புரை ஆற்றினார்.ஒன்றிய பொறுப்பாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் கொம்பையா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விஜயாபுரி ஊராட்சி துணை தலைவர் ஞானபண்டி , விவசாய சங்க நிர்வாகிகள் சந்திரன், சுந்தரி, பூமி, சடையாண்டி, பாலு, சதீஷ், ரத்தினாதேவி. சின்னச்சாமி, குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
