• June 7, 2025

Month: February 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: பல்வேறு சங்கங்களின் ஆதரவு குவிகிறது

கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தை வியாபாரிகள் நாளை 8 -ந்தேதி புதன்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு போராட்டத்துக்கு பல்வேறு சங்கங்களின் ஆதரவு குவிந்து வருகிறது, மந்திதோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கம்,மாதாங்கோவில் ரோடு வியாபாரிகள் சங்கம்,நடராஜபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம்,பசுவந்தனை ரோடு வியாபாரிகள் சங்கம், கோவில்பட்டி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், புதுக்கிராமம் அனைத்து வியாபாரிகள் சங்கம், தாமஸ் நகர் மற்றும் இலுப்பையூரணி வியாபாரிகள் சங்கம்,கோவில்பட்டி நெல், அரிசி […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகத்தை மட்டுமே நம்பி ஆளுங்கட்சி அத்துமீறல் ; டி.ஜெயக்குமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்தார், அப்போது  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  திமுக வினர் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது. கூறியதாவது;- ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தினந்தோறும் ஆளும் இந்த விடியா அரசு,அரசு இயந்திரத்தை முழுமையாக மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தி அதன் மூலம் ஒரு குறுக்கு வழியிலே வெற்றிபெறுகின்ற முயற்சியிலே ஈடுப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தைக் குறுக்குவழியிலே முடுக்கிவிட்டாலும்,பணத்தை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தினசரி சந்தை செயல்பட தொடங்கி உள்ளதாக நகராட்சி

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை புதுப்பிக்கும் பணிக்காக கூடுதல் பஸ் நிலையத்த்துக்கு தினசரி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்லாமல் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தினசரி சந்தை செயல்பட இன்று (௭-ந்தேதி) முதல் தொடங்கி உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.  இன்று ஒரு சில வியாபாரிகள் கடைகளை திறந்து உள்ளனர். தற்போது வரை 150 பேர் வரை தற்காலிக தினசரி சந்தையில் கடைகள் அமைக்க பதிவு […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பா.ஜனதா ஆதரவு -அண்ணாமலை அறிவிப்பு

பா.ஜ.க.மாநில  தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றிகளைத் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் 8-ந்தேதி முழு கடையடைப்பு போராட்டம்

கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தினசரி மார்க்கெட் வியாபாரிகள் 8-ந்தேதி(புதன்கிழமை) முழு கடையைடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடப்பட்டு இருக்கும், கடையடைப்புக்கு வியாபாரிகள் வலியுறுத்தும் கோரிக்கைகள் வருமாறு:-‘

கோவில்பட்டி

கோவில்பட்டி, ஓட்டபிடாரம், விளாத்திகுளம், கயத்தாறு பகுதிகளில் குதிரைவாலி சாகுபடியில் அதிக மகசூல்; விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், கயத்தாறு வட்டாரங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் ரக விதைகளை வழங்கியும், சாகுபடி உயர் தொழில்நுட்ப பயிற்சிகளையும் வேளாண்மைத்துறையினர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சிறுதானியமான குதிரைவாலி பயிரிடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு வந்தது. இதனால் ஓட்டப்பிடாரம் அருகே […]

கோவில்பட்டி

சமாதான கூட்டம்: கோவில்பட்டியில் இன்று நடக்க இருந்த பா.ஜனதா போராட்டம் ஒத்திவைப்பு;

கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பு இன்று 6ந் தேதி  (திங்கட்கிழமை) பா.ஜனதா சார்பில் காலையில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் முன்பு தூங்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது. இதையொட்டி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் பிடிஓ அலுவலகத்தில் சமாதான கூட்டம் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஆர் பாலமுருகன் தலைமையில்ஒன்றிய பொதுச்செயலாளர் வசந்தராஜ் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து முன்னிலையில் இபி காலனி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

*  கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி  சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில்  பவுர்ணமி  சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 7: மணிக்கு 108 பெண்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பரபரப்பு சம்பவம்: காரில் கடத்தப்பட்ட பூசாரி மீட்பு; 6 பேரை போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் உமையலிங்கம் (வயது 34). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மனைவி மனிஷாவுடன் வசித்து வருகிறார். கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் தென்றல் நகரில் உள்ள சாய்லிங்கம் கோவிலில் உமையலிங்கம் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று  இரவில் கோவிலில் பூஜையை முடித்து விட்டு, உமையலிங்கம், தனது நண்பர் கோமதிராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 3,333 பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம்; கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கதிர்வேல் முருகன் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு 3,333 பக்தர்கள் செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ரகத்தில் கதிர்வேல் முருகன், மேளதாளம் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடத்துடன் பின் தொடர்ந்து சென்றனர். இந்த பால்குட ஊர்வலம் எட்டயபுரம் ரோடு, கதிரேசன் கோவில் ரோடு வழியாக வீர வாஞ்சி நகர் கதிர்வேல் முருகன் கோவிலை […]