கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் 8-ந்தேதி முழு கடையடைப்பு போராட்டம்

கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தினசரி மார்க்கெட் வியாபாரிகள் 8-ந்தேதி(புதன்கிழமை) முழு கடையைடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மூடப்பட்டு இருக்கும்,
கடையடைப்புக்கு வியாபாரிகள் வலியுறுத்தும் கோரிக்கைகள் வருமாறு:-‘
- தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து அனைத்து கட்சிகள், வியாபாரி சங்கங்களின் நிர்வாகிகள் , பொதுமக்களிடம் கருது கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.
- *50 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் பொது கட்டப்பட்ட தினசரி சந்தை, தற்போது கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் 4 லட்சம் மக்களின் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் இருக்கிறது,. எ னவே மக்கள்தேவைக்கு ஏற்ப விரிவடைந்த மிகப்பெரிய தினசரி சந்தை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
- *தினசரி சந்தை கட்டுமானம் குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகங்களை போக்கும் வகையில் புதிய கட்டுமானத்திற்கு வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக வேண்டும்.
- * கடந்த 1ந்தேதி தினசரி சந்தையில் சட்டவிரோதமாக சில கடைகளை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், சீல் வைத்ததை கண்டித்து அறவழியில் போராடிய வியாபாரிகள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.
- தினசரி சந்தையை இடமாற்றம் செய்யும் இடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் தேவையை நிறைவேற்றும் வகையிலும் பாதுகாப்புடன் வியாபாரம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
- *
