கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தினசரி சந்தை செயல்பட தொடங்கி உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தகவல்

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை புதுப்பிக்கும் பணிக்காக கூடுதல் பஸ் நிலையத்த்துக்கு தினசரி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்லாமல் தவிர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தினசரி சந்தை செயல்பட இன்று (௭-ந்தேதி) முதல் தொடங்கி உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இன்று ஒரு சில வியாபாரிகள் கடைகளை திறந்து உள்ளனர். தற்போது வரை 150 பேர் வரை தற்காலிக தினசரி சந்தையில் கடைகள் அமைக்க பதிவு செய்து உள்ளதாகவும்.. இது குறித்து பரிசீலித்து கடைகள் அமைக்க அனுமதி கொடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ள்ளது.
மேலும் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் – கூடுதல் பஸ் நிலையம் இடையே அரசு பஸ் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதல் பஸ் நிலையத்தில் கடை அமைக்க பதிவு செய்தவர்கள் பற்றிய விபரங்கள் நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
