• June 7, 2025

சமாதான கூட்டம்: கோவில்பட்டியில் இன்று நடக்க இருந்த பா.ஜனதா போராட்டம் ஒத்திவைப்பு;

 சமாதான கூட்டம்: கோவில்பட்டியில் இன்று நடக்க இருந்த பா.ஜனதா போராட்டம் ஒத்திவைப்பு;

கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பு இன்று 6ந் தேதி  (திங்கட்கிழமை) பா.ஜனதா சார்பில் காலையில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் முன்பு தூங்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.

இதையொட்டி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் பிடிஓ அலுவலகத்தில் சமாதான கூட்டம் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஆர் பாலமுருகன் தலைமையில்ஒன்றிய பொதுச்செயலாளர் வசந்தராஜ் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து முன்னிலையில் இபி காலனி குடியிருப்போர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் பாலா உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் ராஜீவ்நகர்  ஆறாவது சாலை ரேஷன் கடை முதல் காசி அம்மன் கோவில் வரை உள்ள சாலை மாவட்ட நிர்வாகத்திற்கு ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் மற்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் காசி அம்மன் கோவில் முதல் இபி காலனி பானு ஸ்டோர்வரை மினி பஸ் சாலை வரும் நிதியாண்டில் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இபி காலனி ஆனந்த நகர் எஸ் எஸ் டி நகர் மற்றும் குறுக்குத் தெருவில் வாறுகால் பணிகள் சாலை பணிகள் விரைவாக நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று வட்டார வளர்ச்சி அதிகாரி சீனிவாசன்  உறுதி அளித்தார்.

இதன்  அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று பா.ஜனதா ஊடகபிரிவு மாவட்ட  தலைவர் அம்மன் மாரிமுத்து கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *