• June 7, 2025

Month: December 2022

தூத்துக்குடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு நடை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் மு.கார்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-டிசம்பா் 16-ஆம் தேதி மார்கழி மாதம் தொடங்குவதை அடுத்து, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும்3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தோ் […]

தூத்துக்குடி

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது; அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டம்

சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-“தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளிகூட சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளிகூட சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன. 28 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு […]

செய்திகள்

ஜெயலலிதா நினைவு நாளில் அன்னதானம்; டி.ஜெயக்குமார் வழங்கினார்

ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கபப்ட்டது, இதையொட்டி சென்னை 59-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நாகமணி நடராஜன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,.அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் , வடசென்னை தெற்கு (மேற்கு)மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் வெற்றிலை மாரிமுத்து, ஆவின் அருள்வேல், எம்.கன்னியப்பன், கேப்டன் குணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்,

தூத்துக்குடி

டீ, காபி, சாம்பார், சால்னா, ரசம் போன்ற சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில்

அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் சூடான உணவுப் பொருட்களை பொட்டலமிடும் பொழுது, அப்பைகளிலிருந்து, டைஈதைல்ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்பினால்-v போன்ற வேதிப்பொருட்கள் வெளியாகி, அவை உணவுடன் கலந்துவிடும். வேதிப்பொருட்கள் கலந்த உணவினைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஹார்மோன் பிரச்சினைகள், சிறுநீரகக் கற்கள், ஈரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதிற்கு பல அறிவியல் ஆய்வுகள் ஆதாரமாக உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பொட்டலமிடுதல்) […]

செய்திகள்

13 மாவட்டங்களில் 8-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி காலை வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும்.இதனால் […]

செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு: மீனவர்கள் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்-அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினாலும் ஒரு சில மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக வட மாவட்டங்களில் போதிய மழை இல்லை.இந்த நிலையில் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி […]

தூத்துக்குடி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைபயண குழுவினர் தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான நகரான கோவில்பட்டியில் பழுதடைந்துள்ள சாலைகள், ஆற்றின் வரத்துக் கால்வாய்களை சரி செய்ய வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க அனுமதி இல்லாமல் முறைகேடாக இறக்குமதியாகும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்,தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தூத்துக்குடி மாநகரில் மழைநீர்-வெள்ளநீர் தேங்காமல் மக்கள் நிம்மதியாக வாழ சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி […]

சினிமா

இயக்குனர் பாலாவின் `வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா திடீர் விலகல்

இயக்குனர் பாலாவின் `வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த […]

செய்திகள்

தி.மு.க. கூட்டணிகட்சிகள் இடையே முரண்பாடு; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா ௬-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவரும உறுதிமொழி எடுத்துகொன்டனர்,.தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி:- அ.தி.மு.க.வில் நான்கு அணிகளாகப் பிரிந்து அஞ்சலி செலுத்தும் நிலை உள்ளதே? பதில்:-ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலபேர் நீக்கப்பட்டுள்ளார்கள். 66 சட்டமன்ற உறுப்பினர்களில் […]

செய்திகள்

6-வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கபட்டது, இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான தொண்டர்கள் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் […]