• June 7, 2025

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது

 திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் மு.கார்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டிசம்பா் 16-ஆம் தேதி மார்கழி மாதம் தொடங்குவதை அடுத்து, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும்
3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தோ் புறப்பாடு, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 – 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

பிரதோஷ நாள்களான டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 4-ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. முக்கிய விழா நாட்களான ஜனவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருக்கோவில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 6-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவா் தினம், 17-ம் தேதி உழவா் திருநாள், 21-ம் தேதி தை அமாவாசை மற்றும் 26-ஆம்தேதி குடியரசு தினம் ஆகிய நாள்களில் அதிகாலை 4 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *