மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைபயண குழுவினர் தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான நகரான கோவில்பட்டியில் பழுதடைந்துள்ள சாலைகள், ஆற்றின் வரத்துக் கால்வாய்களை சரி செய்ய வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க அனுமதி இல்லாமல் முறைகேடாக இறக்குமதியாகும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்,
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தூத்துக்குடி மாநகரில் மழைநீர்-வெள்ளநீர் தேங்காமல் மக்கள் நிம்மதியாக வாழ சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 ஊர்களில் இருந்து நடை பயணம் நடத்தியது.
கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களிலிருந்து மாக்சிசத் கம்யூனிஸ்டு கட்சியினர் நடை பயணமாக தூத்துக்குடி வந்தனர், கோவில்பட்டியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தலைமையிலான நடைப்பயனக்குழுவினை மாநிலக்குழு உறுப்பினர் கே.அர்ஜூணன் துவக்கி வைத்தார்.
பாண்டவர்மங்கலம், கரிசல்குளம், சிவந்திபட்டி, காமநாயக்கன்பட்டி, அச்சங்குளம், தீத்தாம்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர், புதூர் பாண்டியாபுரம், வழியாக தூத்தக்குடி அண்ணாநகர் பொதுக்கூட்டம் மேடையை நேற்று மாலை வந்தடைந்தனர்,
இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் ஸ்ரீருவைகுண்டம் பஜாரில்தொட ங்கிய நடைப்பயனக்குழுவினை சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். சிவகளை, பெருங்குளம், சாயர்புரம், கூட்டாம்புளி, புதுக்கோட்டை, சோரீஸ்புரம், 3 வதுமைல் வழியாக அண்ணாநகர் பொதுக்கூட்டம் மேடையை வந்தடைந்தது.

திருச்செந்தூரில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அர்ச்சுணன் தலைமையிலான நடைப்பயனக்குழுவினை மாநிலக்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் துவக்கி வைத்தார். காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்கானி, பழையகாயல், முத்தையாபுரம், லெவிஞ்சிபுரம் வழியாக அண்ணாநகர் பொதுக்கூட்டம் மேடையை வந்தடைந்தது.
அண்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநகர் செயலாளர் தா.ராஜா வரவேற்புரையாற்றினார். மாநில செயற்க்குழு உறுப்பினர் நூர்முகம்மது, மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன், ஆர்.ரசல் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிறப்புரையாற்றினார்.
