கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன், மேற்கு மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர்கள் வெங்கடசாமி, சாமிய்யா, மாநில துணை தலைவர் நம்பிராஜன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பாராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு செஸ் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும். 2020-21-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் […]
10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு (2021-2022) தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவில்பட்டி பள்ளி மாணவ-மாணவிகள் 30பேருக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மந்தித்தோப்பு ரோட்டியுள்ள தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஸ்வர்கம மகாஜன சங்கத்தலைவர் பாலமுருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை அவர் வழங்கினர். விஸ்வகர்ம […]
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் படங்களில் நடித்து பிரபலமான ராஷிகன்னா தற்போது தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.கதாநாயகிகள் பலர் வழக்கமாக டாக்டராக ஆசைப்பட்டு நடிகையாகி விட்டேன் என்று சொல்வது உண்டு. ஆனால் ராஷிகன்னா ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டதாக தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-”நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாரிப்பாண்டியன். இவர் சென்னையில் ஒரு சுவீட் கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாரித்தாய். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3-வது மகள் மகாலட்சுமி (வயது 1). நேற்று மாலை மாரித்தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தை மகாலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தது. மூத்த பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் சென்று வந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து குழந்தை மகாலட்சுமியை காணவில்லை. அவள் அக்காள்களுடன் […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 6-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.எனவே, கோவில்பட்டி உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் தினசரி மார்க்கெட் பகுதி, கடலைகார தெரு, செக்கடித்தெரு, இனாம் மணியாச்சி, இந்திரா காலனி, மஞ்சு நகர், […]
5 சதவீத ஆதரவு கூட இல்லாமல் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் ஓ.பன்னீர்செல்வம்- டி.ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி….அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று நீங்கள் தெரிவிக்கும் நிலையில் நான்தான் இன்றைக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துவருகிறாரே? பதில்:- இப்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தினாலே நான் எதுவும் […]
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கோவில் யானை சர்க்கரை நோயினால் பாதிகப்பட்டுள்ளது. டாக்டர்கள் நேரில் வந்து யானையை பரிசோதித்து பார்த்தனர். உடலில் சரக்க்கரை அளவு கூடி இருப்பதால் கால் வலியினால் யானை அவதிப்பட்டு வருகிறது.நீண்ட நேரம் நிற்கமுடியாமலும், நடப்பதற்கும் கஷ்டப்படுகிறது. இதனால் டாக்டர்கள் யானையின் கால்களுக்கு தோல் செருப்பு அணிவிக்கும்படி அறிவுரை கூறினார்கள்.இதன் படி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானைக்கு ரூ. […]
முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல், ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரை சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.இந்த நூல் வெளியீட்டு விழா சார்ஜா பேலஸ் உணவகத்தில் நடைபெற்றது. முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஹ்ரூப் தலைமை தாங்கினார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்று பேசினார். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் மூலநூல் ஆசிரியர் இஸ்மாயில் மேலடி குறித்த […]
கோவில்பட்டி பல்லாக்கு ரோடு பகுதியில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்டோவில் இருந்த டிரைவரான கோவில்பட்டி பல்லாக்கு சாலையை சேர்ந்த மாதவன் மகன் தாமசை (வயது 26) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், ரேஷன் அரிசி மூட்டைகளை மதுரை வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. […]
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் செந்தில்குமார் (40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார். உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடையில் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு செந்தில்குமார் காரில் நேற்று மாலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2பேர் காரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் […]