பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். தூத்துக்குடியில் வி.வி.டி. சிக்னல் அருகே வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் […]
தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களது மகள் சத்யா (20), மகன் கணேசன் (18). சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, அவரை பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு, சுப்புலட்சுமி திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து […]
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில், தற்போது ஆழமான பகுதிகளில் மட்டும் தண்ணீர் காணப்படுகிறது. அந்தப் பகுதிகளில், சிலர் வலையை விரித்து மீன் பிடிப்பது வழக்கம். தூத்துக்குடி முத்தையாபுரம், குமாரசாமிநகர் 3-வது தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மீன்பிடிப்பதற்காக கோரம்பள்ளம் குளத்தில் வலையை விரித்து வைத்திருந்தார். நேற்று காலையில் சென்று அவர் மீன்களுக்காக வலையை வெளியே இழுக்க முயன்றார். ஆனால் அவரால் வலையை இழுக்க முடியவில்லை. இதனால் அதிக அளவில் மீன்கள் வலையில் […]
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறி இருப்பதாவது:- இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் தோல்வியைக் கண்டு வருந்த வேண்டாம். தேர்வு மட்டுமே நமது வாழ்க்கையல்ல. தோல்வியை அடுத்த முறை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றுங்கள். இந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களுடன் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதியில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கு 27 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 23 விடுதிகளும், ஒரு ஐ.டி.ஐ மாணவர் விடுதியும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகளும், கல்லூரி […]
தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை பெருவிழா நடந்து வருகிறது. இறுதி நாளான ஆகஸ்ட் 5-ந் தேதி நகர வீதிகளில் தூய பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி பேராலய வரலாற்றில் இதுவரை 15 […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு :- தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும். இத்திட்டம் மூலம் தற்போது […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 1600 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.12.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக்கொள்ளலாம். நுண்ணீர் பாசன […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-‘ ,தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளத்தில் 9 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 1030 மணி அளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ. ஐ.டி.ஐ. டிரைவர் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி கல்வித் […]
தூத்துக்குடி சிதம்பரம் நகர் மெயின் ரோட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரையண்ட் நகர் பகுதி திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தங்கினார்,. இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஆனந்த கபரியேல்ராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-‘ தமிழக முதலமைச்சர் தளபதியாளரின் திராவிட மாடல் ஆட்சியில் சமூகநீதி, சமத்துவம், தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்நாடு வளர்ச்சி […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
