பிரியாணி கடைக்காரரின் மகன் வெட்டிக்கொலை

 பிரியாணி கடைக்காரரின் மகன் வெட்டிக்கொலை

தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களது மகள் சத்யா (20), மகன் கணேசன் (18). சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன்  இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, அவரை  பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு, சுப்புலட்சுமி திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து அவர் ஆவுடையப்பன், மகன் கணேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைமணிக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுடலைமணி அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து கணேசன், தனது நண்பர்கள் சென்ற பிறகு தனியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது சுடலைமணி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் கீழே விழுந்த கணேசனை, சுடலைமணி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி, தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று அதிகாலையில் இறந்தார்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  சுடலைமணியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *