மதுரை மாநகருக்கு இன்று வருகை புரிந்த அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.மதுரை-தூத்துக்குடி பைபாஸ் ரோடு டோல்கேட் அருகில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஆள் உயர் மாலை அணிவித்து மலர் கிரீடம் சூட்டப்பட்டது. இதில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.மோகன் , விளாத்திக்குளம் […]
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றறது.அ.தி.மு.க,சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-.கேள்வி :- அ.தி.மு.க. அலுவலகத்தில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஜ.டி. தெரிவித்துள்ளதே பதில் :- இது உண்மையிலேயே ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசியாக இருக்கின்ற ஜே.சி.டி.பிரபாகர் அனைத்து […]
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு புதிய பதவி கொடுத்த ஓபன்னீர்செல்வம்; கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த ‘சீல்’ அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத்தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்த புண்ணிய பூமிக்கு வந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து பலர் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இதற்கு நமது பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களும், நிர்வாக திறமையுமே காரணம்.தமிழகம் பிரதமரின் இதயத்தில் இடம்பெற்றுள்ள மாநிலமாகும். மோடி கூட்டாட்சி முறையின் வழிமுறைகளை மிகவும் நம்புகிறார். தமிழக அரசு கூட்டாட்சி முறைக்கு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் செயல்படவில்லை. […]
கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அப்பகுதியில் உள்ள பா,ஜனதா கட்சி அலுவலம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனரஇந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கோவை ஒப்பனக்காரவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் […]
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 12-ம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22-ம் தேதி முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் […]
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இதனிடையே பூஜாகோயல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் குத்தகை காலம் முடிவடையாததால் தங்களால் வெளியேற முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தனர். இது தொடர்பாக 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.இந்த நிலையில், தி.மு.க. எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முகநூலில், திமுக எம்.பி ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரது நாக்கை அறுத்து […]
தி.மு.க.உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் […]
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு திண்டுக்கல், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து நீராடிவிட்டு செல்வது வழக்கம்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும்போது புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் விழும். கடந்த மாதம் 3-ந்தேதி நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் விழுந்தது. அந்த சமயத்தில் தாண்டிக்குடியில் தனியார் எஸ்டேட்டில் வேலைபார்த்த பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பருடன் அங்கு நீராட சென்றார்.அப்போது ஆபத்தை உணராமல் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
