மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். […]
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு தான் அங்கீகாரம் கிடைக்கும்; அண்ணாமலை பேச்சுக்கு டி,ஜெயக்குமார்
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று பா.ஜனதா போட்டியிட்டது. பாரளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றியது.தற்போது 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது தனித்து போட்டியிடுவோம் என்று […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோரிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகவேல்(வயது 32). இவர் கடந்த 2021ல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் கூரபப்டது.இதை தொடர்ந்து முருகவேல்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி சரண், குற்றம் சாட்டப்பட்ட முருகவேலுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 […]
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ‘மாண்டஸ்’ புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் புயல் வீசக்கூடிய மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் […]
வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:- வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். தீவிரப்புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.காரைக்காலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தீவிர புயலாக உள்ள மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். புயல் […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது :-9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று […]
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் நாளை (9-ந் தேதி) அன்று பேரூராட்சிகளிலும், […]
தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாமல், நிலைத்த தன்மையற்ற வீடு, வாழ தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுக்க உள்ளது. தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் அல்லது இதர ஓலைகளை கொண்டு கூரை வேயப்பட்ட வீடுகள், தகரம் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரை வீடுகள் கணக்கெடுப்புக்கு தகுதியான வீடுகளாகும்.மண், சுடப்படாத செங்கல், மண் கலவையுடன் கூடிய கருங்கல், சிமெண்ட் பலகை போன்ற நிலைத்த தன்மையற்ற […]
பிரபல நகைச்சுவை நடிகர் டி. சிவ நாராயணமுர்த்தி நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67 பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவ நாராயணமூர்த்தியின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விவேக் மற்றும் வடிவேலு காமெடிகளில் முக்கிய துணை நடிகராக நடித்து வந்த நடிகர் சிவநாராயணமூர்த்தியை நடிகரும் இயக்குநருமான விசு அறிமுகம் செய்து வைத்தார். பூந்தோட்டம் என்ற படத்தில் முதன் முதலாக நடித்த சிவநாராயணமூர்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் […]
குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார் பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமி.பின்னர் சொப்பன சுந்தரி நான் தானே” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.அதற்கு முன் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த செல்லுலாய்டு என்கிற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். விஜயலட்சுமிக்கு கடந்த 2016ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்பிறகு அந்த மணமகன் ஏராளமான நிபந்தனைகள் போடுவதாக கூறி அந்த திருமணமே வேண்டாம் என நிறுத்தினார்.பின்னர் கடந்த 2018ல் இன்டீரியர் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
